பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் நூறு படங்களில் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜூக்கு ஹிந்தி திரையுலகமும் ஒன்றும் புதிதல்ல. இதுவரை ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆனார். அவரை வைத்தே சமீபத்தில் ப்ரோ டாடி என்கிற தனது இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இந்த அனுபவங்களை ஹிந்தியில் முதலீடு செய்யும் விதமாக தற்போது ஹிந்தியில் ஒரு வெப்சீரிஸில் நடிப்பதோடு அதை இயக்கும் வாய்ப்பும் பிரித்விராஜை தேடிவந்துள்ளது.. பிஸ்கட் கிங் ராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ்உருவாக இருக்கிறதாம். அதேசமயம் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதாலும் கதையின் முக்கிய கதாபாத்திரம் கேரளாவை சேர்ந்தவர் என்பதாலும் மலையாளத்திலும் இந்த வெப்சீரிஸ் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.




