தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் 36 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற இவர், இந்தியாவின் நைட்டிங் கேர்ள் என்று அழைக்கப்பட்டார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிறகு மத்திய பிரதேச அரசு அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகமும், இசைப்பள்ளியும் அமைக்கப்பட உள்ளதாகவும், அவர் பெயரில் இசை கல்லூரி தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
தற்போது லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பல ஆண்டுகளாகவே அவர் வாழ்க்கை கதையைப் படமாக்க முயன்றார். ஆனால் அதற்கு லதா மங்கேஷ்கர் அனுமதி தரவில்லை. "என் பாடலை கேட்பதை தவிர மக்கள் என் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை" என்று அவர் கூறி வந்தார்
இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் தற்போது லதா மங்கேஷ்கர் வாழ்க்கையை படமாக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் முறையான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.