இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராம்கோபால் வர்மா தற்போது தகனம் என்ற வெப் சீரிசை தயாரித்து உள்ளார். இதில் இஷா கோபிகர் நடித்துள்ளார். அவருடன் நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் இஷா கோபிகர், அஞ்சனா சின்ஹா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நைனா கங்குலி நக்சலைட்டாக நடித்துள்ளார். அபிஷேக் துஹான், ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிலாஷ் சவுத்ரி, நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே, சென்னா ரெட்டியாக நடித்துள்ளார்.
தொடர் குறித்து ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது: இது நான் இயக்கும் முதல் ஓடிடி தொடர். மகாத்மா காந்தி சொன்ன 'கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்', மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட 'பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி' என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த கதை. இது வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. என்கிறார் வர்மா.