ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பிரீத்தி ஜிந்தாவுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் அமெரிக்காவில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து இந்த குழந்தைகளை விமானத்தில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார், நீண்ட தூர விமான பயணம் என்பதால் இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு சிரமப்பட்டுள்ளார். அப்போது அதே விமானத்தில் வந்த பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு குழந்தையை தான் வாங்கி வைத்துக் கொண்டு அவருக்கு உதவி செய்திருக்கிறார்.
இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் , நமது வாழ்க்கையில் பலர் வருவார் போவார்கள். ஆனபோதிலும் உண்மையாகவே உதவி செய்வது ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் என்னுடைய குழந்தைகளை நீண்ட நேர விமானப் பயணத்தில் ஹிருத்திக் ரோஷன் அன்போடு கவனித்துக் கொண்டார். அவருக்கு எனது நன்றி என்று சொல்லி அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.