ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். சினிமாவில் எந்தளவுக்கு நடித்து சம்பாதிக்கிறாரோ, அதே அளவுக்கு விளம்பரங்கள் மூலம் கோடிகளில் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் பான் மசாலா தொடர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, எதிர்வினையாற்றி வந்தனர். இந்நிலையில் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் அக்ஷய்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன். கடந்த சில நாட்களாக உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினை என்னை பாதித்துள்ளது. இனி இதுமாதிரியான புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். அந்த நிறுவனத்துடனான எனது தொடர்பை முறித்துக் கொள்கிறேன். இந்த விளம்பரத்தின் மூலம் கிடைத்த பணத்தை வேறு ஏதேனும் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த எண்ணி உள்ளேன். சட்டப்பூர்வ ஒப்பந்தப்படி அந்த விளம்பரம் அதற்குரிய காலம் வரை ஒளிபரப்பாகும். அதேசமயம் இனி எதிர்காலத்தில் எனது விளம்பர தேர்வுகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். அதற்கு பதிலாக நான் எப்போதும் உங்கள் அன்பையும், விருப்பத்தையும் கேட்கிறேன்.
இவ்வாறு அக்ஷய் தெரிவித்துள்ளார்.