தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்கிற கோஷம் பல ஆண்டுகளாகவே தெற்கில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ந்த மாநிலங்களாக தென்னிந்திய மாநிலங்களை முதலிடத்தில் இருக்கிறது. அரசியலை போலவே சமீபகாலமாக திரைப்படங்களிலும் வடக்கு, தெற்கு பிரித்து பார்க்கப்படுகிறது. இதனை அக்ஷய்குமார் கடுமையாக எதிர்த்துள்ளார்.
அவர் நடித்துள்ள பிருத்விராஜ் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் இதுகுறித்து பேசியிருப்பதாவது: ஒவ்வொரு படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலேயே உருவாகிறது. அனைத்து படங்களும் வெற்றிபெற வேண்டும். தென்னிந்திய சினிமா, வட இந்திய சினிமா என்று யாராவது பிரித்து சொன்னால், அதை வெறுக்கிறேன். அதோடு பான் இந்தியா படங்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. நாம் அனைவரும் ஒரே துறையில் தான் பணியாற்றுகிறோம் என்றே நம்புகிறேன். தெற்கு, வடக்கு என்கிற விவாதம் பெரிதாக மாறிவிட்டது. அது நிறுத்தப்பட வேண்டும். மொழியை பொறுத்தவரை அவரவர் தாய்மொழியில் தான் பேசி வருகிறோம். அது அழகாக இருக்கிறது. இதில் பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பிரித்துப் பார்ப்பது துரதிர்ஷ்டமானது. என்றார்.
இதே கருத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் கமல்ஹாசன் அங்குள்ள மீடியாக்களிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நான் எப்போதும் என்னை இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நான் வசதியாக இருக்க முடியும். அதுதான் இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் அழகு. வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் அபாரத் திறமைகளை அறிவேன். அதனால் அதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. என்று கூறியுள்ளார்.