தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஹிந்தி தேசிய மொழியா, இல்லையா என்பது குறித்து கன்னட நடிகர் சுதீப்பும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானும் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை எங்கள் கட்சி பார்க்கிறது. மாநில மொழிகளை மதிக்கிறோம், வணங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து கிச்சா சுதீப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என கூறி நான் கலகத்தையோ, விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை. எந்தவித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன் வைத்தேன் அவ்வளவுதான். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒருவித பெருமையாகவும் பாக்கியம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன். மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் ஒரு தலைவராகவும் பார்க்கிறோம் என சுதீப் தெரிவித்துள்ளார்.