பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமீபகாலமாக தென்னிந்திய திரையுலகில் பான் இந்தியா என்கிற வார்த்தை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தெலுங்கு இளம் முன்னணி நடிகர்கள் அனைவருமே பான் இந்திய படங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேசமயம் இவர்களிலிருந்து நடிகர் மகேஷ்பாபு சற்றே வித்தியாசப்பட்டு, எனக்கு தெலுங்கு திரையுலகில் நடித்தாலே போதுமானது என சமீபத்தில் கூறினார்.. இது உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்து இன்னொரு நிகழ்ச்சியில் மகேஷ்பாபு பேசியபோது பாலிவுட் திரை உலகத்தால் என்னை வாங்க முடியாது என்கிற அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். தற்போது அவர் பேசிய வார்த்தைகளை வைத்து பாலிவுட் திரையுலகில் ஒரு விவாதமே ஆரம்பித்துள்ளது. குறிப்பாக முன்னணி தயாரிப்பாளர்களான போனிகபூர், மகேஷ் பட் ஆகியோர் மகேஷ்பாபுவின் இந்த கருத்துக்கு தங்களது பதில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போனிகபூர் கூறும்போது, “ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்துக்களைக் கூறுவதற்கு உரிமை இருக்கிறது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட திரையுலகை பற்றி மட்டும் தனியாக கமெண்ட் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் பாலிவுட், தென்னிந்திய சினிமா என இரண்டு தரப்புக்கும் சொந்தமானவர் தான்.. ஏற்கனவே தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் நடித்தது அவருக்கு ஞாபகம் இருக்கலாம். இதேபோல மலையாளத்திலும் கன்னடத்திலும் கூட அவர் விரைவில் படங்கள் நடிக்கலாம். அதனால் இதுபோன்ற கருத்துக்களை சொல்வதற்கு அவர் சரியான நபர் அல்ல' என்று கூறியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான மகேஷ் பட், மகேஷ்பாபுவின் கருத்து குறித்து கூறும்போது, 'ஒருவேளை தான் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அவரை இந்தியில் நடிக்க வைக்க முடியாது என்பது போன்ற அவர் சொல்லியிருந்தால் அது சரியானதுதான் நான்.. அவருக்கு ஆல் த பெஸ்ட் சொல்கிறேன்.. ஒருவேளை பாலிவுட் திரையுலகம் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி வேலை செய்ய முடியாது என அவர் நினைத்தால், அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.. ஒவ்வொருவருக்கும் அவர்களது சொந்த திரையுலகம் தான் இருக்கிறதே..” என்று கூறியுள்ளார்.




