தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சஞ்சு படத்திற்கு பிறகு 4 வருட இடைவெளிக்கு பிறகு ரன்பீர் கபூர் நடித்திருக்கும் படம் ஷம்ஷேரா. இதில் ரன்பீர் கபூருடன் சஞ்சய்தத், வாணி கபூர், அஷூதோஸ் ராணா, ரோனித் ராய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கரன் மல்ஹோத்ரா இயக்குகிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பல் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான, ஜி ஹுசூர் இன்று வெளியாகி உள்ளது. இதனுடன் படத்தின் கதை பற்றிய விபரங்களையும் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: காஸா என்கிற கற்பனை நகரத்தில் நடப்பதாக ஷம்ஷேராவின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு போர் வீர பழங்குடியினர், ஷுத் சிங் என்ற ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரியால் சிறைவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகின்றனர். அடிமையாகி, அடிமையிலிருந்து தலைவனாகி, பின் தன் கூட்டத்திற்கு ஒரு அடையாளமாக மாறும் ஒரு மனிதனின் கதையே ஷம்ஷேரா. தனது கூட்டத்தின் சுதந்திரத்திறக்காகவும், கண்ணியத்திற்காகவும் அயராது போராடும் வீரனின் பெயர் தான் ஷம்ஷேரா.
பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இக்கதை, 1800-களின் இந்தியாவில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத், ரன்பீர் கபூரின் எதிரியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக் காட்சிகளில் அவர் ரன்பீருடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் அதிரடிக் காட்சிகள் பேசப்படுவதாக இருக்கும். இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை, 22ம் தேதி வெளியாகிறது.
இவ்வாறு தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.




