ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அசாமிய திரைத்துறையில் முன்னணி இளம் நடிகராக இருந்தவர் கிஷோர் தாஸ். நடிகர் மட்டுமல்லாது முன்னணி அசாமிய பாடகரும்கூட. 300க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய படத்தில் நடித்து இருந்தார்.
31 வயதான கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அசாம் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வரின் வேண்டுகோள்படி சென்னையிலேயே கிஷோரின் இறுதி சடங்குகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.