'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

பாலிவுட்டின் வசூல் நாயகனும், சர்ச்சை நாயகனுமான சல்மான் கானுக்கு மும்பை போலீஸ் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டு மானைக் கொன்ற வழக்கில் சல்மான் சிக்கியதிலிருந்தே அவருக்கு பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கடந்த மே மாதம் பிரபல பஞ்சாய் பாடகரான சித்து மூசேவாலாவை லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் சுட்டுக் கொன்றது. அப்போது சல்மான் கானுக்கு அந்தக் கும்பலிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதனடிப்படையில் தனது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மும்பை போலீஸிடம் லைசென்ஸ் கேட்டு சல்மான் விண்ணப்பித்திருந்தார்.
சல்மானின் கிரிமினல் ரெக்கார்டு, அவரது பின்னணி ஆகியவற்றை விசாரித்து அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் உடன் சல்மான் இது குறித்து நேரிலும் பேசியுள்ளார்.
தான் வழக்கமாகப் பயன்படுத்தும் லேண்ட் குரூய்சர் காரையும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்க முடியாத புல்லட் ப்ரூப் காராக சல்மான் மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது.