மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் |
சமீபகாலமாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், பெல்பாட்டம், ரக்ஷா பந்தன் உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள கட்புட்லி படம் வெளிவர இருக்கிறது. இது தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்.
இந்த நிலையில் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷய் குமாரிடம் தொடர் தோல்விகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த உருக்கமான பதில் வருமாறு: எனது படங்களின் தோல்வியை நான் உற்று கவனிக்கிறேன். அதற்கான காரணத்தை ஆராய்கிறேன். இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன். என் படங்கள் போதிய வரவேற்பை பெறாததற்கு நாங்கள் தான் காரணம், குறிப்பாக நான் தான் காரணம். நான் உடனே சில மாற்றங்களை செய்ய வேண்டும், பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியான தோல்விகளுக்கு என்னைத் தவிர வேறு யாரை பொறுப்பாக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறு அக்ஷய் குமார் கூறியிருக்கிறார்.