ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய சினிமாவின் அடையாளமாக சின்னமாக கருதப்படுகிறவர் அமிதாப் பச்சன். 80 வயதை எட்டி உள்ள இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். ஆனாலும் ஹிந்தி தொலைக்காட்சிகள் அமிதாப்பை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. இதுகுறித்து பலரும் இதுபோன்ற ஆளுமைகளை கேலி பொருளாக்காதீர்கள் என் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் கண் முன்பே அப்படி ஒரு அவலம் அரங்கேறியதால் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு அபிஷேக் பச்சன் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முக்கிய விருந்தினராக பங்கேற்க அபிஷேக் பச்சன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்தார்.
இதனால் கோபமான அபிஷேக் பச்சன், ''நிறுத்துங்கள். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ஜோக் அடியுங்கள். என் தந்தையை கேலி செய்து பேசுவது நல்லது அல்ல'' என்று ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இந்த சம்பவம் அமிதாப் மற்றும் அபிஷேக் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.