தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
உத்திர பிரதேச மாநிலத்தில் போதை பொருள் தடுப்பு இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். அதேபோல் ஷாருக்கானின் மகன் கூட போதை பொருள் பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று பல நடிகர்கள் போதை பொருளை பயன்படுத்துகிறார்கள். மதுபானம் சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் போதை பொருளுக்கு அடிமையாவதிலிருந்து விடுபட வேண்டும். இதற்கு இந்தியாவில் உள்ள அனைவரும் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் போதைப்பொருள் பயன்படுத்தியவர் என்று அவர் வெளியிட்ட தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.