இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான சன்னி லியோன் சமீபகாலமாக தமிழ், மலையாளம் படங்களிலும் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். தற்போது தமிழில் ‛ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்து முடித்திருப்பவர், அதையடுத்து ‛தீ இவன்' என்ற படத்தில் நடிக்கிறார். அதுபோல் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சன்னி லியோன் அளித்த ஒரு பேட்டியில் சொன்ன கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து வருகிறார். என்றாலும் படப்பிடிப்பு தளங்களில் தான் கவர்ச்சிகரமான உடை அணிந்து நடிக்கும்போது அந்த ஸ்பாட்டில் தன்னுடைய குழந்தைகளோ அல்லது மற்றவர்களின் குழந்தைகளோ இருப்பதற்கு அவர் அனுமதிப்பதில்லையாம். அப்படி யாரேனும் சிறிய குழந்தைகள் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் தான் நடிப்பதையே தவிர்த்து விடுவதாகவும் சன்னிலியோன் தெரிவித்திருக்கிறார். அவர் சொன்ன இந்த கருத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.