விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சட்டசபை உறுப்பினர் ராணாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் வழியில் அரசியலிலும் குதித்தார். அமராவதி தொகுதியில் ராணா தனிப்பட்ட செல்வாக்கில் இருந்தார். இதனால் அமராவதி பார்லிமென்ட் தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நவ்நீத் கவுர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கபட்ட தனி தொகுதியில் நவ்நீத் கவுர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது வழக்கு தொரடப்பட்டது. மும்பை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின்போது நந்நீத்தின் ஜாதி சான்றிதழை கோர்ட் ரத்து செய்தது.
இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் நவ்நீத் ஆஜராகவில்லை. இதனால் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் நவ்நீத் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நவ்நீத் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.