தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சட்டசபை உறுப்பினர் ராணாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் வழியில் அரசியலிலும் குதித்தார். அமராவதி தொகுதியில் ராணா தனிப்பட்ட செல்வாக்கில் இருந்தார். இதனால் அமராவதி பார்லிமென்ட் தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நவ்நீத் கவுர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கபட்ட தனி தொகுதியில் நவ்நீத் கவுர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது வழக்கு தொரடப்பட்டது. மும்பை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின்போது நந்நீத்தின் ஜாதி சான்றிதழை கோர்ட் ரத்து செய்தது.
இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் நவ்நீத் ஆஜராகவில்லை. இதனால் அவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் நவ்நீத் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நவ்நீத் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.