ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாரூக்கான். நாயகனாக மட்டுமல்லாது பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்துள்ளார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம், கோல்கட்டா ஐபிஎல் அணியின் உரிமையாளர் உள்ளிட்ட பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாரூக்கிற்கு சொந்தமான 'மன்னாத்' என்ற பெயர் கொண்ட பெரிய பங்களா ஒன்று உள்ளது. அங்குதான் ஷாரூக் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் முன்பு ரசிகர்கள் அடிக்கடி ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்கள். தற்போது அந்த வீட்டின் முகப்பில் உள்ள பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டு புதிய வடிவில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை ரசிகர்கள் 'டைமண்ட்' பெயர்ப் பலகை என அழைத்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பழைய பெயர் பலகையை நீக்கிவிட்டிருந்தார்கள். அது குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் அந்தப் பெயர் பலகைகள் வீட்டு கேட்டின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஷாரூக் உண்மையிலேயே வைரங்களைப் பதித்துள்ளாரா அல்லது வைரங்களைப் போல் மின்னும் கற்களைப் பதித்துள்ளாரா என அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.