தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மும்பை : இந்திய ராணுவத்தை நக்கலடிக்கும் விதமாக ஹிந்தி நடிகை ரிச்சா சதா பதிவிட்டது சர்ச்சையானது. பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் ரிச்சா.
பாலிவுட் நடிகை ரிச்சா சதா. ‛ஹேங்ஸ் ஆப் வசிப்பூர், புக்ரே, 3 ஸ்டோரீஸ், ஷகீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‛‛பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாக திரும்ப பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்களது பதில் வேறுமாதிரி இருக்கும்'' என வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் கூறியதை ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதை ரீ-டுவீட் செய்த நடிகை ரிச்சா, ‛‛கல்வான் ஹாய் சொல்கிறது'' என பதிவிட்டார். அதாவது கல்வானில் சீனா ராணுவம் நுழையும் என்பது போன்று அவரது பதிவு நக்கலாக இருந்தது. இவரது இந்த பதிவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ராணுவ வீரர்கள் எல்லையில் நாட்டைக்காக போராடி வருகிறார்கள். அதே கல்வான் தாக்குதலில் இந்திய வீரர்களின் உயிர் தியாகம் நிகழ்ந்தது. நாட்டுக்காக வீர மரணம் அடைந்தவர்களை இப்படி நக்கல் செய்வது போன்று ரிச்சா பதிவிட்டுள்ளாரே என சமூகவலைதளங்களில் பலரும் அவரை வசை பாட தொடங்கினர். பலரும் அவரை தாறுமாறாக டிரோல் செய்தனர். இதனால் தனது சமூகவலைதள பக்கத்தை லாக் செய்தார் ரிச்சா. இருந்தாலும் அவருக்கான கண்டனங்கள் குறையவில்லை. பலரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பதிவிட்டனர்.
இதனால் பதறிபோன ரிச்சா உடனடியாக தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அப்படியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களும் ராணுவத்தில் இருந்தவர்கள். ராணுவம் எனது ரத்தத்திலே உள்ளது'' என்கிறார்.




