ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பெங்களூருவை சேர்ந்த மோசடி தரகர் சுகேஷ் சந்திரசேகர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேசுக்கு உதவியதாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அமலாக்கத்துறையிலும், நீதிமன்றத்திலும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாக்குலின் மீது, மோசடி வழக்கு நடந்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நோரா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “ஜாக்குலின் சில ஊடக நிறுவனங்களுடன் இணைந்து எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். என்னை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவும், சமூக ரீதியாக என்னை பலவீனப்படுத்தவும் சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார். இந்த மோசடி வழக்கில் துளியும் தொடர்பில்லாத என்னை இழுத்து விட்டிருக்கிறார். எனவே அவர் மீதும், அவருக்கு துணையாக உள்ள ஊடக நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த ம-னுவில் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.