போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து ஜனவரி 25ம் தேதி வெளிவந்த படம் 'பதான்'. முதல் நாளில் 100 கோடி வசூலை அள்ளிய இப்படம் இரண்டாம் நாளிலும் 100 கோடியைக் கடந்தது. நேற்றைய மூன்றாம் நாளிலும் 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் 100 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் மூன்றே நாட்களில் 300 கோடி வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக 200 கோடியையும், வெளிநாடுகளில் 100 கோடியையும் கடந்துள்ளது. இந்திய நிகர வசூலாக 161 கோடி வரை பெற்றுள்ளது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம்.
இதற்கு முன்பு தென்னிந்தியப் படங்களான 'கேஜிஎப் 2' 140 கோடியும், 'பாகுபலி 2' 127 கோடியும் பெற்ற சாதனையை 161 கோடி வசூலித்து 'பதான்' புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். முதல் முறையாக ஒரு ஹிந்திப் படம் இந்த அளவு வசூலித்திருப்பது பாலிவுட்டினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் நிச்சயம் 400 கோடி வசூலைத் தாண்டிவிடும் என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.