தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் உள்ளிட்ட படைப்புகள் பெற்று வருகின்றன. ஆனால் சினிமாவில் சொல்ல முடியாத கதையை, காட்ட முடியாத காட்சிகளை, அநாகரிகமான வார்த்தை, வசனங்களை எளிதாக பயன்படுத்தும் களமாக ஒடிடி தளங்களை மாற்றி விட்டனர். இதனால் ஒடிடி தளங்களுக்கும் சென்சார் வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கான், வெப் சீரிஸ்களின் சமீபத்திய போக்கு குறித்தும் அதற்கு சென்சார் கட்டாயம் வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தி பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சல்மான்கான் பேசும்போது, “தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் பல வெப் சீரிஸ்களில் ஆபாசம், அநாகரிக வார்த்தைகள் என நிறைய இடம் பெற்று வருகின்றன. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பது என்றால் ஓகே. ஆனால் இன்று எல்லோர் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் உங்களது சின்ன குழந்தை கூட இது போன்ற படங்களை பார்ப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ? அதனால் ஓடிடியில் வெளியாகும் படைப்புகளும் நிச்சயமாக சென்சார் செய்யப்பட வேண்டும்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய தலைமுறையை சேர்ந்த இளம் நட்சத்திரங்கள், இதுபோன்ற படைப்புகளை சூப்பர், கடின உழைப்பு, திறமை என்கிற வார்த்தைகளால் பாராட்டி வருவது தான்.. அதே சமயம் முன்பை விட தற்போது நல்ல கருத்தாக்கம் கொண்ட ஒரு சில படைப்புகளும் ஓடிடியில் வெளிவருவதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.




