ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கிரிக்கெட்டில் ஜ.பி.எல் போல கபடி விளையாட்டில், புரோ கபடி லீக் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என்ற அணியின் போட்டி நடைபெற்றது. இந்த அணியை நடிகர் அபிஷேக் பச்சன் தான் நிர்வகித்து வருகிறார். அதனால் ஜெய்பூர் அணியின் விளையாட்டை காண்பதற்காக, அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யாவும் மற்றும் அபிஷேக் பச்சனின் சகோதரி மகள் நவ்யாவும் வந்திருந்தனர்.
இந்த நிலையில் அனைவரும் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்போது ஐஸ்வர்யா ராயின் காதுகளில் அபிஷேக் பச்சன் ஏதோ கூறியுள்ளார். அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் தனது கண்களை உருட்டி மிகுந்த கோபத்துடன் அபிஷேக் பச்சனை பார்க்கிறார். மேலும் உடன் வந்திருந்த உறவினர் மீதும் கோபப்பட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.