ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரேம் இயக்கத்தில், துருவா சர்ஜா நடித்து வரும் படம் 'கேடி - தி டெவில்'. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன், அமிர் குரைஷி உள்பட பலர் நடிக்கிறார்கள், சஞ்சய் தத் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் நடந்து வருகிறது. இதில் துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர், மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மா இயக்கி வந்தார். இந்த சண்டை காட்சியின் போது, படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் எதிர்பாராதவிதமாக டம்மி குண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சஞ்சய்தத்திற்கு காயம் ஏற்பட்டதாகவும், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதை சஞ்சய் தத் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவு : ‛‛எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவை உண்மையல்ல. கடவுள் அருளால் நான் நலமாக உள்ளேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன். என்னுடைய காட்சிகளை படமாக்கும்போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.