சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த 2020ல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, அவரது மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டது.. போதைப்பொருள் தடுப்பு துறை அவரிடம் செய்த விசாரணையில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருளை வரவழைத்து கொடுத்தார் என்பதுடன், மேலும் பல நடிகைகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்வது தொடர்பாக ரியாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ரியா.
சில மாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார் ரியா. ஆனால் முன்னைப்போல் படங்களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ ரியா நடிக்கவே இல்லை. இந்தநிலையில் கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் கேமரா முன் வந்து நின்றுள்ளார் ரியா. இதுகுறித்து அவர் கூறும்போது, “மூன்று வருடங்களாக எந்த படப்பிடிப்பிலும் நான் கலந்துகொள்ள வில்லை. கடந்த சில வருடங்களாக மேக்கப், சிகை அலங்காரம் என எதுவும் நடக்காததால் இந்த கேரவன் ஒப்பனை அறை கூட எனக்கு புதிது போன்ற ஒரு உணர்வை தருகிறது” என்று கூறியுள்ளார்.