சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
புதுடில்லி : பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மகள் ஆராத்யா பச்சன் உடல்நிலை குறித்து, 'யு டியூப்' சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 'வீடியோ'க்களை நீக்கும்படி, 'கூகுள்' நிறுவனத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிக்கு, 11 வயதில் ஆராத்யா பச்சன் என்ற மகள் இருக்கிறார். இவரது உடல்நிலை குறித்து, யு டியூப் சமூக வலைதளத்தில் சிலர் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். அதில், ஆராத்யா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்து இருந்தனர்.
இதை எதிர்த்து, ஆராத்யா, அவரது தந்தை அபிஷேக் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஹரி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி உத்தரவிட்டதாவது: ஒவ்வொரு குழந்தையும் மாண்புடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். ஒரு குழந்தையின் உடல் நலம், மன நலம் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது, சட்டப்படி ஏற்க முடியாதது. ஆராத்யா உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவேற்றம் செய்த யு டியூபர்கள் குறித்து, கூகுள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வீடியோக்களை யு டியூப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இந்த சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய விவகாரத்தை கையாள்வதில் உள்ள கொள்கை குறித்து, கூகுள் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.