தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா தான் தற்போது நகை அணியும் பெண்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'மெட் காலா 2023' என்ற பேஷன் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் வந்த பிரியங்கா சோப்ரா 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்துள்ளார்.
கருப்பு நிற நீளமான கவுன் ஆடையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த அந்த வெள்ளை நிற வைர நெக்லஸ் வந்திருந்த அனைவரின் கண்களைப் பறித்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கண்களைப் பறித்து வருகிறது. அந்த வைர நெக்லஸ் அமெரிக்க ரூபாய் மதிப்பில் 25 மில்லியன் யுஎஸ் டாலர் என்கிறார்கள். நிகழ்ச்சிக்குப் பின்பு அந்த வைர நெக்லஸ் ஏலம் விடப்படுமாம்.