தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாராகும் பெரிய பட்ஜெட் படங்களால் சினிமாவுக்கே ஆபத்து என்று பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பலகோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களில் கதை, நடிப்பு என எதுவும் இருப்பதில்லை. அவற்றில் 5 பாடல்கள் இருக்கின்றன. அவற்றை நடன இயக்குநர்கள் கவனிக்கின்றனர். சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை ஸ்டன்ட் இயக்குநர்கள் கவனிக்கின்றனர். படத்தில் இயக்குநருக்கு என்ன வேலை? நடிகருக்கு என்ன வேலை?. மக்கள் பார்க்க விரும்பாத படங்களுக்கு பல நூறு கோடிக்கு மேல் செலவு செய்கின்றனர். அவற்றில் ஒன்றும் இல்லாததால் அவை தோல்வி அடைகின்றன. நல்ல கலைஞர்களை வைத்து வெறும் 50 கோடியில் இவர்கள் படம் எடுப்பதில்லை.
பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள்தான் திரைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம். கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்தும் அவற்றில் வெற்றிடங்களாக உள்ளன. இந்த படங்கள் சினிமாத் துறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஏதோவொரு காரணத்தால் அரிதான ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் ஆகின்றன. ஆனால், அந்த 3 சதவீத படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் மீதமிருக்கும் 97 சதவீத படங்களும் தோல்வி அடைகின்றன. இவை அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




