தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் ராஜா ராணி மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ன படம் ஜவான். இதில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் தற்போது செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாருக்கான்தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஜவான் வெளியீடு தாமதமாவது குறித்த ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க, பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை. படக்குழுவினர் அனைவரும் சிறிதும் இடைவேளையின்றி பணியாற்றி வருகிறார்கள், தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஜவான் ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லி மற்றும் அவரது குழுவினரின் அணுகுமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது” என்றார்.




