இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரிணிதி சோப்ரா. 2011ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சாம்கிலா, கச்சுலா கில் படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார், தொடர்களிலும் நடித்து வருகிறார்.
ப்ரிணிதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தாவும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. அவர்கள் பொது வெளியில் ஒன்றாக சுற்றுகிற படங்கள் வெளிவந்தது. ஆனாலும் இருவதரும் இது பற்றி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிற செய்தி வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இருவருக்கும் டுவிட்டர் மூலம் வாழ்த்து சொல்லி வருவது திருமணத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
வருகிற 13ம் தேதி இருவருக்கும் டில்லியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த தகவல்களை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.