தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வரும். சமீபகாலமாக கொலை மிரட்டல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் லண்டனில் இருந்து ஒரு மாணவர் சல்மான்கானுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சல்மான்காள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மெயில் அனுப்பியது லண்டனில் மருத்துவம் படிக்கும் ஹரியானாவை சேர்ந்த மாணவர் என்று கண்டுபிடித்தனர். தற்போது அந்த மாணவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் அந்த மாணவரின் பெற்றோர், தங்கள் மகன் அறியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுத்தால் அவனது மருத்துவ படிப்பு நின்று, எதிர்காலம் பாழாகிவிடும் என்கிற கோரிக்கையுடன் அவர்கள் சல்மான்கானை அணுக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் மத்திய அரசு சல்மான்கானுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவரும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். “என்னை நோக்கி பல துப்பாக்கிகள் குறிவைத்துள்ளன” என்று அண்மையில் சல்மான்கான் கூறியதும் குறிப்பிடத்தக்கது.