தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2005ல் தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் கஜினி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ஆமீர்கான் நடிப்பில் இந்த படத்தை ரீமேக் செய்து இயக்கினார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். ஹிந்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலையும் வாரி குவித்தது.
ஹிந்தியில் இந்த படத்தை வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் இந்த படத்தை இந்தியா முழுவதும் வாங்கி வெளியிட்டு லாபம் பார்த்தவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவரான அல்லு அரவிந்த். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஹிந்தியில் ஆமீர்கானை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அல்லு அரவிந்த், இப்படி வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போதும், எப்போதும் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது மட்டுமல்ல இந்த செய்தியை கேள்விப்பட்டு அமீர்கானின் நட்பு வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின்படி லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு ரீமேக் படங்களில் நடிக்கும் எண்ணத்தையே ஆமீர்கான் கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.