ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது தமிழில் ‛சந்திரமுகி 2' படத்திலும், ஹிந்தியில் முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் நடந்த எமெர்ஜென்சி சம்பவத்தை மையமாக கொண்ட ‛எமெர்ஜென்சி' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தியா முழுக்க ஏராளமான தியேட்டர்களை கொண்டுள்ள பிவிஆர் குழுமத்திற்கு இந்தாண்டு 333 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாடு முழுக்க 50 தியேட்டர்களை மூட முடிவெடுத்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, "நம் நாட்டிற்கு இன்னும் அதிகமான தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில் தியேட்டர்களை மூடுவது திரைத்துறைக்கு நல்லதல்ல. அதேசமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தங்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைச் செலவிட வேண்டி இருக்கிறது. இந்த நிலையை சரி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.