துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‛தி கேரள ஸ்டோரி' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை திரையிடுவதற்கு கேரளா, தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் திரையிடப்பட்டது. பல மாநிலங்களில் இந்த படத்திற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அதா சர்மா நடித்திருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு பயணப்பட்டு வந்தார் சுதிப்தோ சென். அந்த வகையில் சமீபத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக சுதிப்தோ சென் கூறும்போது, “எனக்கு நீரிழப்பு மற்றும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். இன்று மாலைக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.