தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் நுழைந்த இந்த எட்டு வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங், நடிகர் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் தற்போது நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்கிற படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகிலும் நுழைந்துள்ளார்.. இந்த நிலையில் விரைவில் திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் கபீர் துஹான் சிங்
ஆம்.. இவரது திருமணம் வரும் ஜூன் 23ம் தேதி டில்லியில் நடைபெற இருக்கிறது. மணப்பெண் சீமா சஹால் ஹரியானாவை சேர்ந்தவர். பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்ட திருமணம். அதேசமயம் இந்த திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விதமாக எளிய முறையில் நடைபெற இருக்கிறதாம்.