இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல். 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்ரி, நரமிம்மடு, பரம் வீர் சக்ரா, அகத்தியர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் நடித்தார். தற்போது மிஸ்ட்ரி ஆப் டாட்டூ, கதார் 2 படங்களில் நடித்து வருகிறார். இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் கலந்து கொண்டார்.
அமிஷா தனது நண்பர் குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி கடன் பெற்றார். படம் திரைக்கு வரும்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார்.ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியுடன் சேர்த்து 3 கோடிக்கு அமிஷா செக் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய்குமார் ராஞ்சி நீதிமன்றத்தில் அமிஷா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமிஷா பட்டேலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் அவர் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.