ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவில் உள்ள இளம் பெண்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு தீவிரவாதிகளாக அனுப்பப்படுகிறார்கள் என்ற கதை அம்சத்துடன் இந்த படம் வெளியாகி இருந்தது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் வெளியாகவில்லை. சில மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்தது.
சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி, சித்னி இத்னானி உட்பட பலர் நடித்த படம். படத்திற்கு எதிர்ப்பு, ஆதரவு இருந்தாலும் படம் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் புரிந்தது. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட அதன் தயாரிப்பாளர் முயற்சித்து வருகிறார். ஆனால் படத்தை வாங்க எந்த ஒடிடி தளங்களும் முன்வரவில்லையாம்.
இந்த படத்தை வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சந்தாதாரர்களை இழக்க வேண்டியது வருமோ என்று தயங்குவதாக தெரிகிறது. பலகோடி செலவில் நடத்தப்படும் ஓடிடி தளங்கள் ஒரு படத்திற்காக தங்கள் முதலீட்டை ரிஸ்கில் விட முன்வராது என்று ஓடிடி தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.