ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயமானவர். குறிப்பாக சுனாமி தாக்கிய சமயத்தில் கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் என்கிற ஒரு கிராமத்தையே தத்தெடுத்து உதவி செய்த வகையில் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். சமீப காலமாக விவேகம், லூசிபர், கடவா என தொடர்ந்து தென்னிந்திய படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்து இவர் ஏமாந்துள்ள நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விவேக் ஓபராயுடன் நெருங்கி பழகிய தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத் துறையை சேர்ந்த இருவர் என மொத்தம் மூவர் தாங்கள் புதிய படம் தயாரிப்பதாகவும் அதில் விவேக் ஓபராய் தயாரிப்பாளராக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்களாம். விவேக் ஓபராயும் கிட்டத்தட்ட தன்னிடம் இருந்து ரூ.1.5 கோடியை தயாரிப்புக்கு என கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அந்த பணத்தை பட தயாரிப்புக்கு பயன்படுத்தாமல் தங்களது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தி வந்தார்கள் என்பது பின்னர் தான் தெரியவந்ததாம்.
அதைத் தொடர்ந்து விவேக் ஓபராயின் ஆடிட்டர் இதுகுறித்து மும்பையில் அந்தேரியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் தான் இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசார் மோசடி செய்த நபர்களை தற்போது தேடி வருகின்றனர்.