விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது படங்களில் அற்புதமான நடனத்தினால் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குழந்தை பிறக்கும்போதே இதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்தது என்கிற அதிர்ச்சி தகவலை கண்ணீருடன் வெளியிட்டுள்ளார் பிபாஷா பாசு.
இது குறித்து அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “எங்கள் முதல் குழந்தைக்காக நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தோம். நான் பெண் குழந்தை தான் பிறக்கும் என என் கணவரிடம் உறுதியாக கூறி வந்தேன். அதேபோல எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் தான் பிறக்கும்போதே இருதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்துள்ளது என்கிற அதிர்ச்சி கலந்த உண்மை எங்களுக்கு தெரிய வந்தது.
அதன் பிறகு வந்த நாட்கள் மிகப் போராட்டமாக கழிந்தன. இந்த தகவலை நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு கூட சொல்லாமல் மகளுக்கு மருத்துவம் பார்த்தோம். பிறந்த மூன்றாவது மாதத்தில் அவளுக்கு ஓபன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவள் எல்லோரையும் போல நலமுடன் இருக்கிறாள். எந்த பெற்றோருக்கும் இதுபோன்ற நிலைமை வரக்கூடாது” என்று கூறியுள்ளார்.