வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயாபச்சன், ஷபனா ஆஸ்மி மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 28ல் வெளிவந்த ஹிந்திப் படம் 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி'. கரண் ஜோஹர் சினிமாவில் நுழைந்த 25வது வருடத்தில் வெளியாகியுள்ள படம் இது. 2016ல் வெளிவந்த 'ஹே தில் ஹை முஷ்கில்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களாக திரைப்படங்கள் எதையும் கரண் இயக்கவில்லை.
“லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ்” ஆகிய வெப் தொடர்களில் ஒரு பகுதியை மட்டும் இயக்கியிருந்தார். தமிழில் வெளிவந்த 'ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்' படங்களின் சாயலில் வெளிவந்த 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் பெரிய சாதனையைப் படைக்கவில்லை. இருப்பினும் கடந்த பத்து நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தற்போது 105 கோடி வசூலைப் பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரூ.100 கோடி வசூலைக் கடந்த ரன்வீர் சிங்கின் 8வது படமாகவும், ஆலியாவின் 8வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.