'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளிவந்த படம் 'ட்ரீம் கேர்ள்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தில் ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, அனன்யா பாண்டே இணைந்து நடித்துள்ளனர். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படம் தயாரித்துள்ளனர். இதற்கு விமர்சகர்களிடம் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.10 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆயுஷ்மான் குர்ரானா நடித்து வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூலித்தது இப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.




