விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

தமிழில் வெளிவந்த 'நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் ஜரீன் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கோல்கட்டாவில் நடந்த துர்கா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நடனம் ஆடவும் ஜரீன் கானுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியும் பல லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார் ஜரீன் கான். இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் கோல்கட்டாவின் சீல்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜரீன் கானுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் ஜரீன் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் தற்போது ஜரீன் கானுக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ஜரீன் கான் கூறும்போது, ''என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. விழாவுக்கு முதல் மந்திரி வருவதாக பொய் சொல்லி என்னை அழைத்தனர். அதனால் போகவில்லை. வக்கீலை சந்தித்து பேசிய பிறகு விளக்கம் அளிக்கிறேன்'' என்றார்.