ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் அட்லி டைரக்ஷனில் ஷாரூக்கான்நடித்த ஜவான் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாநாயகிகளாக நடித்த நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இவர்கள் இருவரையும் தவிர இந்த படத்தில் இடம்பெற்ற பிரியாமணி உள்ளிட்ட இன்னும் சில நடிகைகளும் தங்களது பங்களிப்பை சிறப்பாக தந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அப்படி ஜவான் படத்தில் ஒரு ஜெயில் அதிகாரியாக ஷாரூக்கானின் வளர்ப்புத்தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரிதி தோக்ரா.
37 வயதான இவர் இந்த படத்தில் ஷாரூக்கானின் அம்மாவாக நடித்திருந்ததை பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். ஆனால் ஷாரூக்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்த போது அதை மறுக்க மனமில்லாமல் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாக ஏற்கனவே கூறியிருந்தார் ரிதி தோக்ரா.
தற்போது படம் வெளியாகி உள்ள நிலையில் ஒரு பேட்டியில் இவர் கூறும்போது, “ஷாரூக்கானுடன் இணைந்து ஒரு காட்சியிலாவது ரொமான்ஸ் பண்ண வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் அவர் படத்திற்கான வாய்ப்பு வந்தபோது அம்மா கதாபாத்திரம் என்றாலும் மறுக்க முடியவில்லை. அதேசமயம் படப்பிடிப்பின் போது ஷாரூக்கான் என்னிடம் நீ என் அம்மாவாக நடித்தது உண்மையிலேயே துரதிஷ்டமான ஒன்றுதான் என என்னிடம் கூறினார். அந்த ஒரு வார்த்தை போதும்.. அவருடன் ஜோடியாக நடிக்க முடியாத அந்த வருத்தமும் மறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் ரிதி தோக்ரா.