தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுனின் 22வது படாகவும், அட்லியின் 6வது படமாகவும் உருவாகும் இந்தப் படத்தில் 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' ஒன்று அனைவரிடமும் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
படம் முடியும் வரை படம் குவித்த எந்த ஒரு தகவலையும் யாரும் வெளியில் சொல்லக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம். ஆங்கிலத்தில், 'Non Disclosure Agreement'. இதை 'ரகசிய ஒப்பந்தம்' என்றும் கூட சொல்லலாம். அதாவது படத்தின் ரகசியம் எதையும் வெளியில் சொல்லக் கூடாது.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற உள்ளார்கள். கடந்த மூன்று வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் தடைபட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
ஹாலிவுட் கலைஞர்களும் படத்தில் பணியாற்ற உள்ளதால் எந்த விதத்திலும் படத்திற்கு சிக்கல் வராத அளவிற்கு படப்பிடிப்பை திட்டமிட்டுள்ளார்களாம்.