மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
முன்னணி பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழில் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு வீடுகட்டி கொடுத்தார். விவேக் ஓபராய் நடிப்பதோடு அவ்வப்போது படத் தயாரிப்பிலும் ஈடுபடுவார். அதன்படி பாலிவுட் தயாரிப்பாளர் சாஹோடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் படத் தயாரிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தை நகைகள், மற்றும் இடங்கள் வாங்குவதில் சாஹோவும், அவரது மனைவி ராதிகா நந்தாவும் ஈடுபட்டு வந்துள்ளது விவேக் ஓபராய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விவேக் ஓபராய் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். தான் கொடுத்த பணத்தில் ஒரு கோடியே 50 லட்சம் வரை சாஹோ கையாடல் செய்திருப்பதாகவும், அதனால் அவர்மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் மோடிச வழக்கு பதிவு செய்த போலீசார், சாஹோவை கைது செய்தனர். தலைமறைவான சாஹோவின் மனைவியை தேடி வருகிறார்கள்.