ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பதான், ஜவான் படங்களின் பெரிய வெற்றி ஆயிரம் கோடியை தாண்டிய வசூல் இவற்றால் இந்தியாவின் நம்பர் ஒன் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். சமீப ஆண்டுகளாக சரிந்து கிடந்த பாலிவுட் சினிமாவை இந்த இரண்டு படங்களும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மிரட்டல்களும் அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று ஷாரூக்கான் மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. “முழு நேரமும் ஷாரூக்கானுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரிடம் எம்பி 5 எந்திர துப்பாக்கிகள். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கிளோக் பிஸ்டல்கள் இருக்கும். ஷாரூக்கான் வெளியில் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் செல்வார்கள். இது தவிர ஷாரூக்கான் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 4 போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்” என்று சிறப்பு ஐ.ஜி. திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்.