துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்து ராசியான ஜோடி என்கிற வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றனர். இதை தொடர்ந்து தற்போது வரை அவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாகவும் அதை அவர்கள் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்திருக்கிறது என்கிற தகவலை ஹிந்தி நடிகரும் தற்போது அனிமல் படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவருமான ரன்பீர் கபூர் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு சேனல் ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி தரும் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மற்று இயக்குனர் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரன்பீர் கபூர், ‛‛சந்திப் ரெட்டி வங்கா முதன்முதலாக ராஷ்மிகாவை சந்தித்தது அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்காக விஜய் தேவரகொண்டா தனது வீட்டில் கொடுத்த பார்ட்டியின்போது தான் என்று கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படம் வெளியானது 2017 ஆகஸ்ட் மாதம். கீதா கோவிந்தம் படம் வெளியானது 2018 ஆகஸ்ட் மாதம். அதாவது கீதா கோவிந்தம் பட அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நட்பாக இருந்திருக்கிறார்கள் என்கிற தகவல் இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.