ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஷீரடி: பாலிவுட் நடிகர் நடிகர் ஷாரூக்கான் மற்றும் அவரது மகள் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். அதுபோல் அரசியில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் வருவது வழக்கம்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் சாய்பாபா கோயிலுக்கு வருகை தந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுடன் நடிகரின் மேனேஜர் பூஜாத்தலானியும் உடனிருந்தார்.
கோயிலுக்கு நுழையும் போது அவரது ரசிகர்கள் நடிகரை பார்த்ததும் அவரை பார்த்து கையசைத்தனர். ஒரு சிலர் நடிகரிடம் பேசினர்.
நடிகரின் கோயில் தரிசனம் குறித்து நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
இவர் நடித்துள்ள டன்கி படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. அதற்காக அவர் கோயிலுக்கு வருகைதந்துள்ளார். இதே போன்று இந்தாண்டு வெளியான பதான் மற்றும் ஜவான் படங்கள் வெளியான போதும் அவர் கோயில்களுக்கு சென்று வந்துள்ளார் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.