ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் நடித்த அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார். கடந்த 1ம் தேதி வெளிவந்தது. படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் ஆபாச காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் படம் வசூலை குவித்து வருகிறது. ஆயிரம் கோடியை தொட்டு விடும் என்கிறார்கள்.
இந்த நிலையில் அனிமல் படத்தின் அடுத்த பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி 'அனிமல் பார்க்' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்துடன் சந்தீப் ரெட்டி வங்காவுடன் மேலும் இணைந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருப்பதாக டி சீரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி சீரிஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது : “நம்பிக்கையின் அடிப்படையிலான இந்த கூட்டணி, ஆக்கபூர்வமான சுதந்திரத்தால் தூண்டப்படுகிறது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்த சினிமா அதிசயங்களை நிகழ்த்த இருக்கின்றனர். அவை பிரபாஸின் ஸ்பிரிட், அனிமல் பார்க், மற்றும் அல்லு அர்ஜுன் திரைப்படம் ஆகியவையாகும். 'கபீர் சிங்' (அர்ஜூன் ரெட்டியின் பாலிவுட் பதிப்பு) மற்றும் அனிமல் ஆகிய திரைப்படங்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அடுத்த அத்தியாயங்கள் தயாராகின்றன” என்று அறிவித்துள்ளது.