இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என சமீபத்தில் கூட ஒரு வதந்தி மீண்டும் பரவியது. அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்
நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அபிஷேக் பச்சனுக்கு, “மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, அமைதி நல்ல உடல்நலம், கடவுள் ஆசீர்வாதம், பிரகாசத்துடன், உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், அபிஷேக்கின் குழந்தை காலத்து கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா, அக்கா மகள் நவ்யா நந்தா, அப்பா அமிதாப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.