இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்' என்ற பெயரில் ஹிந்தியில் படமாக உருவாகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது.
“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்ற பின்னணி குரலோடு தொடங்கும் டிரைலரில் அந்தமான் சிறையில் வீர் சாவர்க்கர் துன்புறுத்தப்படும் காட்சிகள் இடம்பெறுகிறது. "வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். இந்த கருத்துகளும், காட்சிகளும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருநாளில் இந்த டிரைலர் கிட்டத்தட்ட 80 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.